இந்தியாவின் உயரமான அருவிகளில் ஒன்றாக கருதப்படும் பர்கானா அருவியின் உயரம் 850 அடி ஆகும். இந்த அருவி அகும்பேவிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில், ஷிமோகா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இது சீதா நதியிலிருந்து உற்பத்தியாகிறது. இதன் பெயரிலுள்ள 'பர்கா' என்ற வார்த்தை, இப்பகுதிகளில் அதிகமாக காணப்படும் புலுட்டுமான் எனும் மான் வகையை குறிக்கிறது.
சுற்றுலாப் பயணிகள் பர்கானா அருவியை அடைவதற்கு மேற்கு தொடர்ச்சி மலையின் செங்குத்தான சரிவுகளில் நடைபயணம் மேற்கொள்ள வேண்டும் . மேலும், மோட்டார் பைக் மூலமாக பர்கானாவை அடைய விரும்பும் பயணிகளுக்கென்றே தனி வழித்தடமும் இருக்கின்றது.
இந்த அருவியை சுற்றிப் பார்க்க பயணிகள் பனிக் காலத்தின் தொடக்கத்தில் வருவது சிறப்பாக இருக்கும். இதன் அருகில் உள்ள பர்கானா காட்சிக் கோண பகுதியிலிருந்து மேற்கு தொடர்ச்சி மலைகளையும், குன்றுகளின் அழகிய சரிவுகளையும் பயணிகள் கண்டு ரசிக்கலாம்.
அதோடு அருவியை சூழ்ந்து காணப்படும் மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த காடுகளும், அந்த காட்டை நிறைத்து கொண்டு நிற்கும் மூங்கில் மரங்களும், இன்னபிற மூலிகைகளும் கண்கொள்ளா காட்சிகளாகும். இதுதவிர இந்தப் பகுதிகளில் 7 வருடத்துக்கு ஒருமுறை தழைத்தோங்கும் குருஜி செடி மிகவும் பிரபலம்.