அகும்பேவிலுள்ள குஞ்சிகள் அருவி இந்தியாவிலேயே உயரமான அருவிகளில் ஒன்று. வராஹி நதியிலிருந்து பிறந்த குஞ்சிகள் அருவி கர்நாடகாவின் நீர் மின்சாரத் திட்டத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. மழைக் காலங்களில் வராஹி நதியின் கிளைகளிலிருந்து பிறக்கும் குட்டி குட்டி அருவிகள் சூழ காணப்படும் பிரம்மாண்டமான குஞ்சிகள் அருவியின் வனப்பை காண்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் ஆண்டு தோறும் இங்கு கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.