அழியாமரம் அல்லது அக்ஷயவாத் என்று அழைக்கப்படும் இந்த பழமையான ஆலமரம் பாதல்புரி கோயிலுக்கு அருகில் அலாகாபாத் கோட்டை வளாகத்தின் உள்ளே அமைந்திருக்கிறது.
வழங்கிவரும் புராணக்கதைகளின்படி, ஒரு முனிவர் விஷ்ணுவிடம் அவரது சக்தியை காட்டும்படி கேட்டுக்கொண்டதாகவும் உடனே அவர் உலகம் முழுவதையும் ஒரு நொடியில் நீரில் மூழ்கிப்போகும்படி செய்து பின் மறு நொடியில் அந்த நீர் வற்றிப்போகும்படி செய்து காட்டியதாக சொல்லப்ப்படுகிறது.
இருப்பினும் அந்த கணத்தில் எல்லாபூலோக அம்சங்களும் நீரில் மூழ்கிப்போன நிலையில் இந்த அக்ஷயவாத் மரம் மட்டும் நீருக்கு மேலே காட்சியளித்திருக்கிறது. எனவேதான் இது அழியா மரம் என்று அழைக்கப்பட்டதாக புராணம் கூறுகிறது.
இந்த கோட்டை தற்போது இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. இருப்பினும் ராணுவத்தினரின் அனுமதி பெற்று பயணிகள் இந்த மரத்தை தரிசிக்கலாம். கும்பமேளா திருநாளின்போது மட்டும் இந்த ஸ்தலம் பொது பிரவேசத்திற்கு திறக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications