ஆல் செயிண்ட்ஸ் கதீட்ரல் எனும் இந்த கிறித்துவ தேவாலயம் அலாகாபத் நகரின் இரண்டு முக்கிய சாலைகள் சந்திக்கும் இடத்தில் அமைந்திருக்கிறது. காத்திக் கட்டிடக்கலை பாணியில் எழுப்பப்பட்டிருக்கும் இந்த அமைப்பு ஆங்கிலேயரால் 19ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
கொல்கத்தாவிலுள்ள விக்டோரியா மெமோரியலை வடிவமைத்த ஆங்கிலேய கட்டிடக்கலை நிபுணரான வில்லியம் எமர்சன் இந்த தேவாலயத்தை வடிவமைத்துள்ளார்.
இந்த பிரம்மாண்ட தேவாலயத்தில் ஒரே சமயத்தில் 400 பேர் அமரும் அளவிற்கு இடவசதி உள்ளது. வரலாற்றுக்காலத்தின் இறுதியில் அதிகமாக பின்பற்றப்பட்ட கலவையான அம்சங்களை இந்த தேவாலயத்தின் அகலமான படிகளும் விக்டோரியன் சித்திரக்குடைவு வேலைப்பாடுகளும் பிரதிபலிக்கின்றன.
ஒவ்வொரு வருடமும் நவம்பர் 1ம் தேதி ஆல் செயிண்ட்ஸ் டே’ எனும் திருநாளாக இந்த தேவாலயத்தில் கொண்டாடப்படுகிறது. அச்சமயம் விசேட பிரார்த்தனை நிகழ்ச்சிகளும் கொண்டாட்டங்களும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. கல் தேவாலயம் எனும் பொருளைத்தரும் ‘பத்தர் கிர்ஜா’ என்ற பெயரிலும் இது அறியப்படுகிறது.