பாதல்புரி கோயில் இந்தியாவிலுள்ள கோயில்களிலேயே மிகப்பழமையானதாகும். இது வேத காலத்தை சேர்ந்ததாக சொல்லப்படுகிறது. பூமிக்கடியில் குடையப்பட்டு அமைக்கப்பட்டுள்ள இந்த அழகிய புராதனக்கோயில் ஆக்ரா கோட்டை வளாகத்துக்குள் அழியா மரம் எனப்படும் அக்ஷயாவாத் ஆலமரத்துக்கருகிலேயே உள்ளது.
இந்த கோட்டைப்பகுதி இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளதால் பொதுமக்கள் சுதந்திரமாக இதில் நுழைவதற்கு அனுமதியில்லை. இருப்பினும் கோட்டைப்பகுதியின் கிழக்கு வாசல் பொது மக்களுக்கு திறக்கப்படுகிறது.
இந்த வழியாக யாத்ரீகர்கள் இந்த புராதனக்கோயிலுக்கு சென்று தரிசிக்கலாம். 16ம் நூற்றாண்டைச்சேர்ந்த இந்த புராதனக்கோயிலில் பல ஹிந்து தெய்வங்களின் அழகிய சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றனர்.
திரிவேணி சங்கமத்திற்கு அருகிலேயே இக்கோயில் அமைந்திருப்பதால் இந்தக்கோயில் ஒரு புனிதமான ஸ்தலமாக ஹிந்துக்களால் வழிபடப்படுகிறது. ராமர் இந்த கோயிலுக்கு விஜயம் செய்ததாக ஐதீக நம்பிக்கை நிலவுவதும் குறிப்பிடத்தக்கது.
சீன யாத்திரீகர் யுவான் சுவாங்கின் பயணக்குறிப்புகளில் இந்த கோயில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவர் ஹர்ஷவர்த்தனரின் ஆட்சிக்காலத்தில் 5ம் நூற்றாண்டில் இந்த ஸ்தலத்துக்கு விஜயம் செய்திருப்பதாக தெரிய வருகிறது.



Click it and Unblock the Notifications