பொர்னாடி வனவிலங்குகள் சரணாலயம், முள்ளடர்ந்த முயல்கள் மற்றும் குள்ளமான பன்றிகளின் வாழ்விடமாகத் திகழ்கிறது. இந்த சரணாலயம் டர்ராங் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
சுமார் 26.22 சதுர கி.மீ. பரப்பளவில் விரிந்திருக்கும் இச்சரணாலயம் ஈரப்பதம் கொண்ட ஒரு நிலமாகும். பாலூட்டி வகைகளான காட்டெருது, யானை, புலி, சிறு இந்திய புனுகுபூனை, சிறுத்தை, காட்டுப்பூனை, முள்ளம்பன்றி, சீன எறும்புதின்னி, இமாலய கருங்கரடி, குரைக்கும் மான் போன்றவற்றோடு குள்ளமான பன்றி, முள்ளடர்ந்த முயல் போன்ற விலங்குகளையும் சுற்றுலாப் பயணிகள் இங்கு காணக்கூடும்.
நீலமயில், ஹார்ன்பில், வங்காள ஃப்ளோரிகன் மற்றும் சதுப்பு நில கௌதாரி ஆகியவை இந்த வனவிலங்குகள் சரணாலயத்தில் காணப்படும் சில பறவைகளாகும்.
சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மங்கல்தாய் நகரமே பொர்னாடிக்கு அருகாமையில் அமைந்துள்ள நகரமாகும். சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள லோக்ப்ரியா கோபிநாத் போர்டோலோய் விமான நிலையமே இதற்கு அருகாமையில் உள்ள சர்வதேச விமான நிலையம் ஆகும்.
பொர்னாடி வனவிலங்குகள் சரணாலயத்துக்குச் செல்ல ஏற்ற காலகட்டம் நவம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடைப்பட்ட காலமேயாகும். இச்சமயத்தில் இங்கு சென்றால் பல்வகை விலங்குகளையும் காணலாம்.