பாப்ஹா சரணாலயம் அஸ்ஸாமின் லக்ஷ்மிபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுமார் 49 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ள இச்சரணாலயம் மில்ராய் சரணாலயம் என்ற பெயரிலும் வழங்கப்படுகிறது.
பாப்ஹா சரணாலயம், ஆசிய கண்டத்தில் காணப்படும் விலங்கினமான நீர் எருமைகளை பாதுகாக்கவென்றே சிறப்பாக உருவாக்கப்பட்டதாகும்.அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாமின் எல்லையோரங்களில் அமைந்திருக்கும் இந்த அழகான சரணாலயத்திற்கு, இதன் இயற்கை அழகை ரசிக்கவென்றே உலகெங்கிலுமிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் இச்சரணாலயத்தை அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர் பறவைகளும் முற்றுகையிடுகின்றன. மர உச்சிகளில் வாழும் இப்பறவைகள் இங்கு வரும் இயற்கை விரும்பிகளுக்கு கண்கொள்ளாக் காட்சியை அளிக்கிறது.
இப்பகுதியின் ஒரே சர்வதேச விமானம் அமையப்பெற்றுள்ள குவாஹத்தியிலிருந்து, இந்த சரணாலயம் அமைந்துள்ள லக்ஷ்மிபூர் மாவட்டம், சுமார் 370 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
லக்ஷ்மிபூர் நகரமே இதற்கு அருகாமையில் உள்ள நகரமாகும். இந்த சிறிய சரணாலயம் போக்குவரத்தைப் பொறுத்த வரையில் நன்கு இணைக்கப்பட்டுள்ளதால் இங்கு போய் வருவது எளிதாகவே உள்ளது.
குளிர்காலம் நிலவும் நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலமே இங்கு விலங்குகளை இனங்கண்டு மகிழ்வுறுவதற்கு ஏற்ற காலம் ஆகும்.