பாந்தவ்கார் கோட்டையின் கட்டுமானத்தை பற்றிய எந்த ஒரு பதிவுகளும் வரலாற்றில் இல்லை. இந்த கோட்டை சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது என கருதப்படுகிறது.
ஏனெனில் `நாரத்-பஞ்சரத்ரா' மற்றும் `சிவ புராணம்' போன்றவற்றில் இந்த கோட்டையைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த புராணங்கள் 2000 ஆண்டுகளுக்கும் மேலான பழைய புராணங்கள் ஆகும்.
இந்த கோட்டையில் இருந்து பல வம்ச அரசர்கள் ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர். உதாரணமாக `மகா' வம்ச அரசர்கள், மற்றும் `வகதகஸ்' அரசர்கள் 3-ம் நூற்றாண்டில் இருந்தும், `ஸென்கார்ஸ்' அரசர்கள் 5 ம் நூற்றண்டில் இருந்தும், `கல்ச்ஹுரிஸ்' அரசர்கள் 10-ம் நூற்றண்டில் இருந்தும் இங்கிருந்து ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர்.
பாக்ஹெல் வம்சத்தின் மகாராஜா `விக்ரமாதித்யா சிங்' 1635-ல் பாந்தவ்கார் கோட்டையில் இருந்து தனது தலைநகரை ரேவாவிற்கு மாற்றிக் கொண்டார்.
உண்மையில் பாந்தவ்கார் மலை மீது அமைந்துள்ள பாந்தவ்கார் கோட்டை ஒரு பிரபலமான சுற்றுலா இடமாகும். நீங்கள் கோட்டையில் இருந்து பார்க்கும் முதல் பார்வையில் இதைச் சுற்றியுள்ள வளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உங்களுடைய கண்களுக்கு புலப்படும்.
தற்பொழுது பாந்தவ்கார் கோட்டை மற்றும் புலிகள் சரணாலயம் உள்பிணைக்கப்பட்டதாய் இருக்கிறது. பெண்புலி மற்றும் அவற்றின் குட்டிகளை பார்பதற்கு இந்த கோட்டை ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும்.