பாந்தவ்கார் பண்டைய குகைகள், பாந்தவ்கார் மலையின் மேல் மணல், கல் குன்றுகளால் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிற்குள் 39 குகைகள் உள்ளன.
நீங்கள் பல குகைகளில் பிராமி வரிவடிவ கல்வெட்டுகள் மற்றும் புலி, பன்றி, யானை மற்றும் குதிரை வீரன் ஆகியவற்றின் புடைப்புருவச் சிற்பங்களை காணலாம். படி குஃபா என்பதற்கு 'மிக பெரிய குகை' என்று அர்த்தம்.
இது பழமையான குகைகளில் ஒன்றான இது 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. இந்த குகையில் பல தூண்கள் மற்றும் ஒன்பது பெரிய அறைகள் உள்ளன. இந்த குகைகள் இயற்கையில் உருவான பழமையான குகைகள் ஆகும்.
மேலும் இங்கு சிலைகள் மற்றும் சிற்பங்கள் இல்லை. ஒருவருக்கு இந்த குகையின் உண்மையான நோக்கம் தெரிவதில்லை. அது இன்னும் ஒரு மர்மமாகவே இருக்கிறது.
ஒரு சிலர் இந்த குகைகள் துறவிகளால் ஆன்மீக தேடல்களுக்காக உபயோகப்படுத்தப் பட்டிருக்கலாம் என்றும் மேலும் சிலர் போர் காலங்களில் போர் ஆலோசனைகளுக்கு ராணவத்தால் பயன் படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர். இப்போது, இந்த குகைகள் புலிகள், வெளவால்கள் மற்றும் பல விலங்கினங்களுகு உறைவிடமாக திகழ்கிறது.