கேத் என்னும் இடத்தில் இந்த பிரசித்தமான விஷ்ணு கோயில் அமைந்துள்ளது. இது அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களை உள்ளடக்கியுள்ளதால் மிகப்பிரசித்தமாக அறியப்படுகிறது.
இக்கோயிலின் வாசலிலேயே கருட பஹவானின் சித்தரிப்பு காணப்படுகிறது. இது கோயில் வளாகத்தை காக்கும் சக்தியாக கருதப்படுகிறது. கோயிலைச் சுற்றிலுமுள்ள சுவர்கள் இடிபாடுகளுடன் காணப்பட்டாலும் இதன் கலையம்சம் பொலிவுடன் பிரகாசிப்பது குறிப்பிடத்தக்கது.