மகாத்மா காந்தியின் நினைவுச் சின்னமாக திகழ்கிறது காந்தி ஸ்மிரிதி. 1955 ஆம் தொடங்கப்பட்ட காந்தி ஸ்மிரிதியில், மகாத்மா காந்தி உபயோகித்த புத்தகங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் கண்காட்சிக்காக வைக்கபப்ட்டுள்ளன.
மேலும், காந்தியின் வாழ்க்கை முறைகளை அறிந்துகொள்ளும் வகையில், அவருடைய வாழ்வியல் புகைப்படங்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளது. பாவ்நகரின் மிக முக்கியமான சுற்றுலாத் தளமாக திகழ்கிறது காந்தி ஸ்மிரிதி. நகரின் பல்வேறு பகுதிகளிலில் இருந்தும் இங்கு எளிதில் வர முடியும்.