கௌரிஷங்கர் ஏரி மற்றும் விக்டோரிய காடு, சுமார் 381 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. இதனை போர் தளவ் என்றும் அழைப்பர். திவான் ஸ்ரீ கௌரிஷங்கர் ஓசாவிற்காக இவ்விடம் அற்ப்பணிக்கப்பட்டுள்ளது.
1872 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த ஏரி, குடி தண்ணீர் தேக்கி வைப்பதற்காக பயன்பட்டுவருகிறது. சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவரும் இடமாக கௌரிஷங்கர் ஏரி திகழ்ந்து வருகிறது.
இந்த ஏரியின் அருகே விக்டோரியா எனப்படும் சிறிய காடு உள்ளது. இங்கு பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கிங்களைக் காண முடியும். இங்கு, தோட்டம் மற்றும் காடுகளில், தாவரங்களை வளர்க்கும் நோக்கில், இரண்டு தோட்டக்கலை நர்சரிகள் இயங்கி வருகிறது.