‘போர்க்கள ராஜா’ என்ற பொருளைத்தரும் ‘மாலிக்-இ-மைதான்’ என்ற இந்த பெயர் ஒரு பிரம்மாண்ட வரலாற்றுக்கால பீரங்கியைக் குறிக்கின்றது. முஹம்மது (முதலாம்) அடில் ஷா அரசரால் 1549ம் ஆண்டு பீஜாப்பூரிலுள்ள ஷெர்ஸா புர்ஜ் எனுமிடத்தில் இந்த பீரங்கி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
பீஜாப்பூரின் எல்லையில் மேற்குச்சமவெளியை நோக்கியவாறு இந்த பீரங்கி அமைந்துள்ளது. வரலாற்றுக்காலத்தை சேர்ந்த ஒரு முக்கியமான பெரிய போர்க்கருவியாக இது பிரசித்தி பெற்றுள்ளது.
இந்த பீரங்கியின் முனைப்பகுதி ஒரு சிங்கத்தின் தலைப்பகுதி போன்றும் அதன் கால்களில் ஒரு யானை நசுக்கப்பட்டிருப்பது போன்றும் நுட்பமாக வார்க்கப்பட்டுள்ளது. பீரங்கியின் மேற்பகுதியில் ஔரங்கசீப் மன்னரின் குறிப்பு ஒன்றும் பொறிக்கப்பட்டுள்ளது.4.45 மீட்டர் நீளமும் 1.5 மீட்டர் குறுக்களவும் கொண்ட இந்த பீரங்கி 55 டன் எடையை கொண்டதாகும். சூரியன் சுட்டு எரிக்கும் வெப்பத்தில் கூட இதன் உலோகப்பகுதி குளுமையாக காணப்படுவதும் தட்டிப்பார்த்தால் ஒரு மணியைப்போன்றே ‘ணங்’ என்ற ஒலி எழுப்புவதும் இந்த பீரங்கியின் ஆச்சரியமான அம்சங்களாகும்.