பீஜாப்பூருக்கு வருகை தரும் பயணிகள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஜும்மா மஸ்ஜித் எனும் மசூதியையும் காண்பது அவசியம். இது முதலாம் அலி அடில் ஷா’வால்(1557-1580) தலிகோட்டா போரின் வெற்றிச்சின்னமாக கட்டப்பட்டுள்ளது.
பீஜாப்பூர் பிரதேசத்திலேயே மிகப்பெரிய மசூதியான இது சுமார் 10,810 சதுர மீட்டர் பரப்பளவுள்ள வளாகத்தில் அமைந்துள்ளது. ஒரு அழகிய குமிழ்கோபுரத்தையும், பெரிய முற்றத்தையும் அலங்கார வளைவுகளையும் இந்த மசூதி பெற்றுள்ளது. பக்தர்களின் தொழுகை வசதிக்காக இங்கு 2250 கறுப்பு இருக்கைச்சதுரங்கள் தரையில் பதிக்கப்பட்டுள்ளன.இந்த மசூதியின் ‘மெஹ்ரா’வானது தங்கத்தால் உருவாக்கப்பட்டு புனித குரானின் வாசகங்களுடன் சுவற்றில் அமைந்த அலங்கார வளைவு அமைப்பாக கலையம்சத்துடன் காட்சியளிக்கின்றது. மேலும் மசூதியின் மையப்பகுதி வெங்காய வடிவில் அமைந்த பெரிய குமிழ் கோபுரத்தின் உள் விதானப்பகுதியாக 45 கூரைஅமைப்புகளின் தொகுப்பாக காணப்படுகிறது.
சுற்றிலும் 35 குமிழ் கோபுரங்கள் சூழ்ந்திருக்க இந்த மசூதியின் மையத்தில் ஒரு நீரூற்று, ஒரு கூடம், குமிழ் கோபுரம் போன்றவை உள்ளன. ஒட்டுமொத்தமாக 12 அலங்கார வளைவுகள் அதே போன்ற 12 உள் வளைவுகளுடன் இணைக்கப்பட்டு காணப்படுகின்றன. கடைசி முகலாய பேரரசரான ஔரங்கசீப்’பால் கட்டப்பட்ட ஒரு நுழைவாயிலையும் இங்கு காணலாம்.