பிகானேர் நகரத்திலிருந்து 8கி.மீ தூரத்தில் இந்த ஒட்டக அபிவிருத்திப் பண்ணை அமைந்துள்ளது. அரசு ஒட்டக அபிவிருத்திப் பண்ணை என்றும் அழைக்கப்படும் இது ஆசியாவிலேயே மிகப்பெரிய ஒட்டக இனவிருத்தி மையமாகும்.
இந்தப் பண்ணை 1984ம் ஆண்டில் இந்திய விவசாய ஆராய்ச்சி குழுமத்தால் துவங்கப்பட்டுள்ளது. 2000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பண்ணையில் ஒட்டகங்கள் இனவிருத்தி செய்யப்பட்டு அவற்றுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இங்குள்ள ஆராய்ச்சி மையத்தின் ஆய்வாளர்களால் ஒட்டகங்கள் குறித்த பிரத்யேகமான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.



Click it and Unblock the Notifications