துங்கார் சிங் மன்னரால் 19ம் நூற்றாண்டில் இந்த ஷிவ் பாரி கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலை எதிரிகளிடமிருந்து காப்பதற்காக பாதுகாப்பான சுற்றுச்சுவருடன் இது கட்டப்பட்டுள்ளது. \
கறுப்பு பளிங்குக்கல்லில் வடிக்கப்பட்ட நான்கு முக சிவபெருமான் சிலையை இக்கோயிலில் காணலாம். மேலும், வெண்கலத்தால் ஆன நந்தி சிலை சிவலிங்கத்தை நோக்கியவாறு அமர்ந்துள்ளது. ‘பாவ்ரி’ என்றழைக்கப்படும் இரண்டு பெரிய குளங்களும் இந்த கோயில் வளாகத்தினுள்ளேயே அமைந்துள்ளன.பிகானேர் நகரத்திலிருந்து 6கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த கோயில் இங்கு சுவற்றில் வரையப்பட்டுள்ள குறு ஓவியங்களுக்காக பிரசித்தி பெற்றுள்ளது. நாட்டில் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான யாத்ரிக பக்தர்களை இந்த சிவப்பு மணற்கல்லால் ஆன கோயில் ஈர்க்கிறது.