ஃப்பூல் சாஹர் என்றழைக்கப்படும் இந்த ஏரி பூந்தி நகரின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள ஃப்பூல் மஹால் வளாகத்துக்குள்ளேயே காணப்படுகிறது. ஏராளமான புலம் பெயர் பறவைகள் இந்த ஏரிப்பகுதிக்கு குளிர்காலத்தில் வருகை தருகின்றன. இந்த பறவைகளைப் பார்ப்பதற்காகவே ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருடா வருடம் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான பருவத்தில் வருகை தருகின்றனர்.