பாவ்ரி என்றழைக்கப்படும் இந்த படிக்கிணறுகள் பூந்தியிலுள்ள விசேஷமான அம்சங்களின் ஒன்று என்பதால் பயணிகள் இவற்றை மறக்காமல் பார்ப்பது நல்லது. கோடைக்காலத்தில் ஏற்படும் தண்ணீர்ப்பஞ்சத்தை தீர்க்கும் நீராதாராமாக இந்த பிரமாண்ட கிணறுகள் பயன்பட்டிருக்கின்றன.
பூந்தியில் சுமார் 50 படிக்கிணறுகள் அமைந்திருந்தாலும் இவற்றில் பெரும்பான்மையானவை காலத்தால் அழிந்துபோன நிலையிலுள்ளன. ராணிஜி கி பாவ்ரி, நாகர் சாஹர் குண்ட மற்றும் நவால் சாஹர் ஆகியன இவற்றில் குறிப்பிடத்தக்கனவாக புகழ் பெற்றுள்ளன.
இவற்றிலிருந்து நீர் முகர்ந்து செல்லும் பணியானது பெண்களின் அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய தருணமாக விளங்கியுள்ளது. மற்ற பெண்களை சந்திக்கவும் மற்றும் உரையாடவும் உதவும் இந்த கிணற்றுப்பகுதிகளுக்கு வண்ணமயமான உடையணிந்து பெண்கள் குடத்துடன் வருகை தருகின்றனர். அற்புதமான கட்டிடக்கலை அம்சங்கள் மற்றும் சிற்ப வடிப்புகளுடன் இக்கிணறுகள் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.