பரஹி கோவில் இந்துக் கடவுளான பரஹிக்காக கட்டப்பட்ட கோவிலாகும். இந்த கோவில் சம்பவத்திலிருந்து 58 கி.மீ. தொலைவில் உள்ள தேவிதுராஹ் என்னும் இடத்தில் உள்ளது.
இக்கோவில் வளாகத்தில் உள்ள பெரிய கற்களை சுற்றுலாப் பயணிகள் காண நேரிடலாம். இது பாண்டவர்களால் பயன்படுத்தப்பட்ட பந்துகள் என்று நம்பப்படுகிறது.
இங்கு நடக்கும் பக்வல் விழாச்சந்தை ஒவ்வொரு வருடமும் ரக்ஷா பந்தன் நாளன்று கொண்டாடப்படும். இந்த சந்தைக்கு நேபாளத்தை சேர்ந்த மக்களும், நாட்டில் பல ஊர்களில் இருந்து பல மக்களும் வந்துச் செல்வர்.
இந்த திருவிழாவின் போது இரண்டு குழுக்கள் ஆடியும் பாடியும் ஒருவர் மீது ஒருவர் கல்லெறிந்தும் விளையாடுவர். இரண்டு குழுவிற்கும் தற்காப்புக்காக பெரிய மர கவசங்கள் கொடுக்கப்படும்.
இது சமயஞ்சார்ந்த உணர்வு என்பதால், இதில் கலந்து கொள்பவர்களுக்கு காயம் ஏற்பட்டாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இந்த திருவிழாவை பல ஆண்டுகளாக கொண்டாடப்பட்டாலும் இது வரை யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்பட்டதாக எந்த ஒரு ஆவணமும் இல்லை.



Click it and Unblock the Notifications