பாலேஷ்வர் கோவில் சம்பவத் மாநகராட்சியில் அமைந்துள்ள ஒரு அழகிய கோவில். இந்த கோவில்கள் சந்த் ராஜாங்கத்தைச் சேர்ந்த அரசர்களால் கட்டப்பட்டது. இது இந்து கடவுள்களான பாலேஷ்வர், ரத்னேஷ்வர் மற்றும் சம்பவதி துர்காவுக்காக கட்டப்பட்டதாகும். கோவில்களின் மண்டபங்கள் மற்றும்...
ஏக் ஹாத்தியா கா நௌலா என்ற தலம் சம்பவத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இது ஒரு தனிப்பட்ட கற்சிற்பமாகும். மேலும் இதனுடன் சம்பந்தப்பட்ட புராண கதைக்காகவும் இது மிகவும் பிரபலம். புராணத்தின் படி, இந்த முழு சிற்பமும் ஒற்ற கையுள்ள ஒரு சிற்பியால் ஒரே இரவில்...
ஆதித்யா கோவில் என்பது ரமக் கிராமத்தில் உள்ள ஒரு பழமையான கோவிலாகும். இந்த கோவில் பல சிகரங்கள், பூக்கள் அடங்கிய பள்ளத்தாகுகள் மற்றும் அடர்ந்த பச்சை காடுகளால் சூழ்ந்து இருக்கிறது.
இங்கு பல பக்தர்கள் வந்து சூரியக் கடவுளை தரிசனம் செய்வர். இந்த கோவில் சந்த் அரச...
லோஹாகாட் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம் சம்பவத்திலிருந்து 14 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்த இடம் லோஹாவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இதன் மதிமயக்கும் அழகை பார்த்து காஷ்மீருக்கு அடுத்து இது தான் இரண்டாவது சொர்க்கம் என்று கூறியுள்ளார் P.பாரன் என்பவர்.
இது...
மாயாவதி ஆஷ்ரமை அத்வைத்த ஆஷ்ரம் என்றும் அழைப்பர். இது சம்பவத்திலிருந்து 22 கி.மீ. தூரத்தில் உள்ளது. கடல் மட்டத்தின் மேல் 1940 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த ஆஷ்ரமத்திற்கு இந்தியாவிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் பல சுற்றுலாப் பயணிகள் வருவதுண்டு.
1898-ல்...
பரஹி கோவில் இந்துக் கடவுளான பரஹிக்காக கட்டப்பட்ட கோவிலாகும். இந்த கோவில் சம்பவத்திலிருந்து 58 கி.மீ. தொலைவில் உள்ள தேவிதுராஹ் என்னும் இடத்தில் உள்ளது.
இக்கோவில் வளாகத்தில் உள்ள பெரிய கற்களை சுற்றுலாப் பயணிகள் காண நேரிடலாம். இது பாண்டவர்களால்...
பனாசூர் கா கிலா என்பது கடல் மட்டத்திலிருந்து 1859 மீட்டர் உயரத்தில் உள்ள ஒரு பழமையான கோட்டையாகும். இது லோஹாகாட்டிலிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
மேலும் இது வரலாற்று இடைக்காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. புராணத்தின் படி, பனாசூர் என்ற அரக்கனை...
கிரந்டேஷ்வர் மகாதேவ் கோவில் கடல் மட்டத்திலிருந்து 6000 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த கோவில் சிவபெருமானுக்காக கட்டப்பட்டதாகும். இங்கு வாழும் மக்கள் இந்த கோவிலில் இருக்கும் சிவபெருமானை கண்தேவ் மற்றும் குர்மபட் என்றும் அழைக்கின்றனர். இந்த கோவில் சம்பவத்திலிருந்து 6...
சௌமு கோவில் சிவபெருமானுக்காக கட்டப்பட்ட ஒரு புகழ் பெற்ற சமயஞ்சார்ந்த ஸ்தலமாகும். இந்த கோவிலுக்கு வருடம் முழுவதும் பல பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பர்.
இங்கிருக்கும் சிவன் மிருகங்களின் காப்பாளராக பார்க்கப்படுகிறார். இங்கு வரும் பக்தர்கள் சிவனுக்கு காணிக்கையாக...
படல் ருத்ரேஷ்வர் என்ற குகை 1993-ஆம் ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த குகையின் நீளம் 40 மீட்டராகவும், அகலம் 18 மீட்டராகவும் இருக்கும். இந்த குகையில் சிவபெருமான் தவம் இருந்ததாக நம்பப்படுகிறது.
இங்குள்ள ஒரு உள்ளூர்வாசியின் கனவில் துர்க்கை கனவில் வந்து தாம்...
பூர்ணகிரி கோவில் கடல் மட்டத்திற்கு மேல் 3000 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்து திருவிழாவான "சைத்ர நவராத்திரி" இந்த கோவிலில் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படும்.
இந்த திருவிழாவின் போது, பல பக்தர்கள் இங்கு தரிசனம் செய்ய வருவர். காளி ஆறு இந்த...
கவால் தேவ்தாவை கோரில் அல்லது கோல் என்றும் அழைப்பர். இங்கிருப்பது நியாயக் கடவுளாகும். இந்த கோவில் கவாரயில் சௌர் என்ற கடவுளுக்காக கட்டப்பட்டதாகும். உள்ளூர் மக்களின் நம்பிக்கை படி இந்த கடவுள், தன் சித்தியுடன் ஏற்பட்ட பகையின் காரணமாக ஆற்றில் வீசப்பட்ட கட்யூரி...
பஞ்சேஷ்வர் என்ற இடம் காளி மற்றும் சர்யூ ஆறுகள் சந்திக்கும் இடத்தில் உள்ளது. இந்த ஆறுகள் சந்திக்கும் இடத்தில் முழுக்கு போடுவது மிகவும் புனிதமாக இந்துக்களால் கருதப்படுகிறது.
இந்த இடத்தின் எல்லை நேபாளத்தை ஒட்டி உள்ளது. இங்கு வருபவர்கள் 6000 மெ.வா. திறன் கொண்ட...