பூர்ணகிரி கோவில் கடல் மட்டத்திற்கு மேல் 3000 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்து திருவிழாவான "சைத்ர நவராத்திரி" இந்த கோவிலில் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படும்.
இந்த திருவிழாவின் போது, பல பக்தர்கள் இங்கு தரிசனம் செய்ய வருவர். காளி ஆறு இந்த கோவிலுக்கு மிக அருகாமையில் ஓடுகிறது. மட்ட நிலத்தில் இதனை சாரதா ஆறு என்று அழைப்பர். இந்த கோவிலுக்கு வருபவர்கள் இங்கிருந்தே பூர்ணகிரி மலை, காளி ஆறு மற்றும் தனக்பூரை கண்டுகளிக்கலாம்.