பனாசூர் கா கிலா என்பது கடல் மட்டத்திலிருந்து 1859 மீட்டர் உயரத்தில் உள்ள ஒரு பழமையான கோட்டையாகும். இது லோஹாகாட்டிலிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
மேலும் இது வரலாற்று இடைக்காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. புராணத்தின் படி, பனாசூர் என்ற அரக்கனை கிருஷ்ண பரமாத்மா இங்கே வைத்து தான் சம்ஹாரம் புரிந்தார்.