சந்தரப்ரபா சரணாலயம் சந்தெளளி மாவட்டத்தில் உள்ள ஒரு மிகச் சிறந்த சுற்றுலா தலமாகும். இது வரலாற்று சிறப்பு மிக்க வாரணாசியிலிருந்து 70 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
இது உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அதிகம் அறியப்படாத சரணாலயங்களில் ஒன்று. பல கண்ணுக்கினிய சுற்றுலா இடங்களை இது தன்னகத்தே கொண்டுள்ளது. இங்கு ராஜ்தாரி மற்றும் தேவ்தாரி என்கிற இரண்டு நீர்வீழ்ச்சிகளும் அடர்ந்த பசுமையான காடுகளும் உள்ளன.
இந்த சரணாலயம் ஆசிய சிங்கங்களை பாதுகாப்பதற்காக 1957-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு சிங்கங்கள் தவிர முள்ளம்பன்றி, பிளாக்புக்களை, சீதல் மான், காட்டுப்பன்றி, சம்பார் மற்றும் நீலான் மான், மற்றும் இந்திய வகை அழகிய மான் போன்ற வன விலங்குகள் காணப்படுகின்றன.
அதோடு இங்கு ஊர்வன இனத்தை சேர்ந்த காரியள் மற்றும் பைதான் போன்றவற்றையும் பார்க்க முடியும். இந்த சரணாலயம் பறவை விரும்பிகளுக்கு ஒரு சிறந்த இடமாகும். இங்கு சுமார் 150 இனங்களை சேர்ந்த உள்நாட்டு மற்றும் இடம் பெயரும் பறவைகள் காணப்படுகின்றன. இ
சரணாலயம் சுமார் 78 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு பரந்து விரிந்துள்ளது. விந்திய காட்டின் வரம்பில் உள்ள இந்த சரணாலயம் நௌகர்ஹ் மற்றும் விஜைகர்ஹ் போன்ற குன்றுகளை உள்ளடக்கியுள்ளது.
அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான 5 மாதங்களே இந்த சரணாலயத்தை பார்ப்பதற்கு உகந்த பருவமாகும். இங்கு நீங்கள் தங்குவதற்கு உண்டான விடுதி வசதிகள் இல்லை என்றாலும், சிற்றுண்டி வழங்கும் பல்வேறு சிற்றுண்டி சாலைகள் உள்ளன.