16ம் நூற்றாண்டில் சென்னைக்கடற்கரைக்கு வந்திறங்கிய போர்த்துக்கீசிய ஆக்கிரமிப்பாளர்களால் இந்த கிறித்துவ தேவாலயம் கட்டப்பட்டிருக்கிறது. துவக்கத்தில் சிறியதாக உருவாக்கப்பட்ட இந்த ஆலயம் பின்னர் 1893ம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் மறு உருவாக்கம் செய்யப்பட்டு கதீட்ரல் அந்தஸ்தும் அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்த புதிய அமைப்பு 19ம் நூற்றாண்டில் கட்டிடக்கலைஞர்கள் மத்தியில் பெரிதும் விரும்பப்பட்ட நியோ-காத்திக் முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
கிறித்துவ ஆன்மீக நம்பிக்கைகளின்படி ஏசு கிறித்துவின் 12 சீடர்களில் ஒருவரான செயிண்ட் தாமஸ் கி.பி 52ம் ஆண்டில் கேரளாவுக்கு வந்திறங்கி பின் சென்னையில் உள்ள பரங்கிமலைக்கு வந்து மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு மரித்ததாக நம்பப்படுகிறது. இது பற்றிய குறிப்புகளை பரங்கி மலை தேவாலய வளாகத்தில் காணலாம்.
சாந்தோம் பசிலிகா எனப்படும் இந்த தேவாலயம் இப்பகுதியிலேயே மிக முக்கியமான தேவாலயமாக பிரசித்தி பெற்று விளங்குகிறது. ரோமன் கத்தோலிக்க பிரிவை சேர்ந்த இந்த ஆலயம் மெட்ராஸ்-மைலாப்பூர் ஆர்ச்டையோசிஸ் நிர்வாகத்தில் கீழ் அடங்கியுள்ளது. தென்னிந்தியாவில் மிக முக்கியான கிறித்துவ யாத்ரீக மையமாக இது புகழ் பெற்றுள்ளது.