பட்டீஸ்வரர் ஆலயம் சிவபெருமானுக்கானது. இது கோயம்புத்தூர் அருகில் உள்ள பேரூரில் அமைந்துள்ளது. சிவபெருமான் பட்டீஸ்வரர் உருவிலும், அவரது துணையான பார்வதி தேவியும் இங்கு வழிபடப்படுகிறார்கள்.
இந்தக்கோயில் நொய்யலாற்றின் மேற்குப் பகுதியில், 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கோயம்புத்தூரிலேயே மிக முக்கியமான கோயிலாக கருதப்படும் இது கொங்கு வேட்டுவ கவுண்டர் சமூகத்தை சேர்ந்த பாளையக்கார மன்னர்களால் கட்டப்பட்டது.
இங்குள்ள மக்களிடையே இந்தக் கோயில் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. ஏனென்றால் கோயம்புத்தூரின் மொத்த மக்கள் தொகையில் சிவபக்தர்களே அதிகமாக உள்ளனர். கோயில் வளாகத்தினுள் அமைந்துள்ள பெரிய சிலைகள் சுற்றுலாப் பயணிகளின் கருத்தைக் கவரும் வகையில் அமைந்துள்ளன.
இந்தக் கோயில் ஆன்மீக முக்கியத்துவம் மட்டுமின்றி வரலாற்று முக்கியத்துவமும் வாய்ந்தது என்பதற்கு காஞ்சியப்ப முனிவர் , அருணகிரிநாதர் ஆகியோரின் கவிதைகளே சான்று.