மேசனா மாவட்டத்தில் அமைந்துள்ள வாட்நகர் குஜராத்திற்கு சுற்றுலா செல்லும் பயணிகள் காண வேண்டிய மற்றொரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும். வாட்நகரில் சமீபத்தில் நடத்தப்பட்ட அகழ்வாய்வின் மூலம் கி.பி. 2 மற்றும் 7 ஆம் நூற்றாண்றிற்கு இடைப்பட்ட புத்த பழங்கால பொருட்கள் மற்றும் புத்த மடாலயம் கண்டுபிடிக்கப்பட்டது.
கண்டுபிடிக்கப்பட்ட மடத்தில் இரு ஸ்தூபம், தொல்பொருட்கள், மற்றும் ஒன்பது அறைகளைச் சுற்றி கட்டப்பட்ட ஒரு திறந்த நீதிமன்றம் போன்றாவைகள் உள்ளன. இந்த அறைகளை ஸ்வஸ்திக் சின்னத்தின் வடிவத்தில் அமைத்துள்ளார்கள்.
தற்பொழுது உள்ள வாட்நகர் மலையின் மீது உள்ள பண்டைய கால எச்சங்களின் மீது அடுக்குகாளாக கட்டப்பட்ட கட்டிடங்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது.
வாட்நகரில் சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள் பார்க்க வேண்டிய பிற முக்கிய இடங்களாவன ஹத்கெஸ்ஹ்வர் மகாதேவ் கோவில், ஸ்ஹர்மிஸ்த ஏரி, ஜெயின் கோயில்கள், டானா ரிரி கார்டன் மற்றும் டேரி, கவுரி குந்த், க்ஹொக்ஹ கணபதி, நாக்ட்ஹரொ நாக் கோவில் மற்றும் நாரஸிங்க் மேத்தாவின் சோரி ஆகும்.