இந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான பைத்யநாத் கோவில் ஜார்கண்டின் பிரதான சுற்றுலா தளங்களில் ஒன்றாகும். இந்து புராணத்தின்படி ராவணனின் வேண்டுதலில் மகிழ்வுற்ற சிவன் அவருக்கு ஒரு லிங்கத்தை பரிசளித்ததாகக் கூறப்படுகிறது.
எதிரி அரசுக்கு அந்த லிங்கம் போவதை விரும்பாத மற்ற கடவுள்கள் விஷ்ணுவிடம் வேண்ட, அதன்படி விஷ்ணு ஐயர் வேடம் பூண்டு ராவணனை அந்த லிங்கத்தை தவறவிட வைத்தாரம். அந்த லிங்கமே தியோகரின் பிரதிஷ்டை செய்யப்படுவதாக நம்பப்படுகிறது.
1596-ல் உருவாக்கப்பட்ட இந்தக் கோவிலின் லிங்கம் பைஜூ என்பவரால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு பைத்யநாத் கோவில் என வழங்கப்பட்டது.
நெளலாகா கோவிலும் அருகிலேயே அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் ஷ்ராவண மாதத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு 30நாள் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக குவிகிறார்கள்.
சிறிய கடைகளும், உணவகங்களும் சுற்றுலாப் பயணிகளால் பெரிதும் விரும்பப்படுகின்றன. காலை 4மணிக்கே திறக்கப்படும் கோவில் இரவு 9மணிக்கு சாத்தப்படுகிறது.



Click it and Unblock the Notifications