தேவிகுளம் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாக திகழ்ந்து வருவதற்கு அதன் தேயிலை மற்றும் ஸ்பைஸ் தோட்டங்கள்தான் முக்கிய காரணம். இங்கு பல்வேறு வகையான தாவரங்களையும், விலங்கினங்களையும் பயணிகள் கண்டு ரசிக்கலாம். அதோடு பல ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்தத் தோட்டம் எண்ணற்ற கவர்ச்சிகரமான மரங்களால் இயற்கையாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.
தேவிகுளம் குன்றுகளை சூழ்ந்து காணப்படும் சிவப்பு மற்றும் நீல பசை மரங்களும், ஸ்பைஸ் தோட்டத்திலிருந்து வரும் மிளகு, கிராம்பு, ஏலக்காய் போன்றவற்றின் நறுமணமும் அற்புதமான சுற்றுலா அனுபவத்தை பயணிகளுக்கு கொடுக்கும்.