தன்பாதின் புகழ்பெற்ற இந்துக் கோவிலான சக்தி மந்திர், துர்கையம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சக்தியாக வணங்கப்படும் துர்கை அம்மன் கோவில் ஜோராபடக் சாலையில் உள்ளது.
அகந்த் ஜோதி என்றும் அணையா தீபம் என்றும் வழங்கப்படும் ஜோதி வைஷ்ணோ தேவி கோவிலில் இருந்து வரவழைக்கப்பட்டது. தீபாவளி மற்றும் தசரா சமயங்களில் இங்கு கூட்டம் நிரம்பி வழிகிறது. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் சிறப்பான நாட்களாக கருதப்படுகின்றன.