15712 அடி நீளமும், 165அடி உயரமும் உள்ள இந்த அணை வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு கட்டப்பட்டுள்ளது. பராகர் நதிக்கரையில், தன்பாதில் இருந்து 48கிமீ தொலைவில் உள்ள இந்த அணை 65சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது.
பூமீக்கடியில் உள்ள மின்சாரநிலையம் 60000கிலோவாட் மின்சாரத்தை உற்பத்து செய்கிறது. அருகிலேயே மான் மற்றும் பறவைகள் சரணாலயமும் உள்ளன.
மின்நிலையத்தைக் காண முன் அனுமதி தேவை. குமார்துபி ரயில் நிலையம் இங்கிருந்து 5கிமீ தொலைவில் உள்ளது, தனியார் பேருந்துகளையும் உபயோகிக்கலாம். மரவீடுகள் பயணிகளின் வசதிக்காகவும், இயற்கையை ரசிப்பதற்காகவும் அரசால் நிர்வகிக்கப்படுகிறது.