தர்மபுரிக்கு அருகில் அமைந்திருக்கும் தீர்த்தமலை மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு ஆன்மீக தலமாகும். இந்த தலம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆரூருக்கு அருகில் அமைந்துள்ளது.
சுற்றுலா பயணிகளும் பெருமளவில் இங்கு வந்து செல்கின்றனர். இந்த தீர்த்தமலையில் இருந்து ஐந்து நீரூற்றுகள் உற்பத்தியாகின்றன. இந்த நீரூற்றுகளை கொண்டே இதற்கு தீர்த்த மலை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த மலையில் இறைவன் சிவபெருமான் எழுந்தருளி இருக்கிறார். இங்கிருக்கும் சிவபெருமான் தீர்த்தகிரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இங்கு ஓடி வரும் புனித நீரூற்றுகளில் குளித்தால் நமது பாவங்கள் எல்லாம் அழிந்துவிடும் என்று இந்த பகுதியில் இருக்கும் மக்கள் நம்புகின்றனர்.
மேலும் ராமர், பேய்களுக்கு எதிரான போரில் ஆயிரக்கணக்கான பேய்களைக் கொன்று அழித்துவிட்டு, அதனால் அவர் தான் பாவம் செய்ததாக நினைத்து, தனது பாவம் போக இந்த நீரூற்றுகளில் நீராடி இங்கு வீற்றிருக்கும் சிவபெருமான வழிபட்டதாக இந்து சமய புராணம் தெரிவிக்கிறது.இந்த தீர்த்தமலைக்கு செல்ல ஏராளமான தமிழக அரசு பேருந்து வசதிகள் உள்ளன.



Click it and Unblock the Notifications