சிவபெருமானுக்காக கட்டப்பட்ட கபிலாஷ் என்ற கோவில் தேன்கனலின் வட கிழக்கு திசையில் மலை மீது அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2239 அடி உயரத்தில் வீற்றிருக்கிறது இக்கோவில்.
60 அடி உயரத்தில் கட்டப்பட்ட பிராம்மண்ட கோவிலாகும் இது. இக்கோவிலை இரண்டு வழியில் அடையலாம். ஒன்று மலை மீது 1352 படிகளில் ஏறி செல்ல வேண்டும் அல்லது மலைகளுக்கு நடுவே குறுக்காலே ஏறி செல்ல வேண்டும்.
இந்த இடம் சிவபெருமானின் புராண வாழ்விடமாக இருப்பதால் இதனை "கைலாஷ்" என்றும் அழைக்கின்றனர். இக்கோவிலில் பல குகைகளும் அதனுள் பல கருவறைகளும் உள்ளது. இம்மலையில் இடைக்காலத்துக்குரிய கோட்டை ஒன்று அழிந்த நிலையில் இருப்பதை காண நேரிடலாம்.
கபிலாஷில் மஹா சிவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்படும். இந்நேரத்தில் விசேஷ பூஜை புரிந்து கடவுளை தரிசிக்க பக்தர்களின் கூட்டம் இங்கு அலை மோதும்.