சப்டசஜ்யா என்ற அழகிய தலம் தேன்கனலில் உள்ளது. இங்குள்ள ராமர் கோவிலுக்காக இந்த இடம் புகழ் பெற்று விளங்குகிறது. 900 அடி உயர மலை மீது அமைந்துள்ளது இக்கோவில்.
இந்த இடத்தில் பாய்ந்தோடும் ஒரு ஓடை இந்த இடத்திற்கு கூடுதல் அழகை சேர்க்கிறது. இந்த இடத்துடன் பின்னப்பட்டு பல புராண கதைகள் கூறப்படுவதுண்டு.
இந்த இடத்தை சுற்றியுள்ள ஏழு மலைகளை குறிக்கும் வகையில் தான் இந்த இடம் சப்ட சஜ்யா என்ற பெயரை பெற்றது. சப்டரிஷிகள் இந்த இடத்தில் தான் தங்களின் ஆசிரமங்களை வைத்திருந்தனர் என நம்பப்படுகிறது.
ராமேஸ்வரம் சிவன், மகாவீரர், விநாயகர் மற்றும் நவக்ரஹங்களுக்கும் இங்கே கோவில்கள் உள்ளன. இங்கு இயற்கை அழகு கொட்டிக் கிடப்பதால் இது ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. மாநிலத்தில் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இங்கு சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.