ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் பவானி அந்த மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகராட்சி ஆகும். பவானி மற்றும் காவிரி ஆறுகள் கூடுமிடத்தில் அமைந்திருக்கும் இந்த இடம் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது.
இந்த இடம் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையை கொண்ட இடமாகும். இந்த நகரத்தின் பெரும்பகுதி தீபகற்பம் போல, ஈரோடு நகரத்தின் வட பகுதியில் அமைந்துள்ளது.
பல்வேறு மனிதர்கள் இந்த இடத்தை 'தெற்கின் திரிவேணி சங்கமம்' என்று அழைத்து வருகிறார்கள். இந்த நகரத்திலிருக்கும் சிவபெருமானின் கோவிலான சங்கமேஸ்வரர் கோவில் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும்.
வேதகிரி, திருச்செங்கோடு, மங்களகிரி, சங்ககிரி மற்றும் பத்மகரி ஆகிய பகுதிகள் இந்த பகுதியை சுற்றியுள்ள பிற இடங்களாகும். இந்நகரத்தில் இருக்கும் தரைவிரிப்பு தயாரிக்கும் தொழில்கள் மிகவும் பிரபலமானவையாகும்.
இங்கு தயாராகும் தரைவிரிப்புகள் தேசிய அளவில் மதிப்பிடப்படுவதால், இந்நகரம் 'கார்பெட் சிட்டி' என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications