ஈரோடு மாவட்டத்திலுள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலயம் 1996-ம் ஆண்டு இந்திய அரசினால் ஏற்படுத்தப்பட்டு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இம்மாவட்டத்தில் மிகவும் பிரபலமாக விளங்கும் இந்த சரணாலயம் பறவைகளின் சொர்க்கபுரியாக விளங்குகிறது. ஈரோட்டின் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவிலேயே இந்த சரணாலயம் அமைந்துள்ளது.
வெள்ளோட்டிற்கு அருகில் இருக்கும் சின்னமலையின் வழிகளில் இச்சரணாலயம் அமைந்துள்ளது. 0.3 சகிமீ பரப்பளவுடைய இந்த சரணாலயத்தின் நடுவில் ஒரு பெரிய ஏரியும் உள்ளது.
இங்கு வரும் பறவைகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தாமலிருப்பதில் ஈரோட்டில் வாழும் மக்கள் மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டுள்ளனர். நவம்பர் மாதத்தில் தொடங்கும் பறவைகள் சீசன் மார்ச் மாதம் வரை நீடித்திருக்கும். ஏரியைச் சுற்றிலும் இருக்கும் பல்வேறு கவனிப்பு கோபுரங்களில் இருந்தவாறே நாம் பறவைகளை கண்டு களிக்க முடியும்.