பெண் தெய்வங்களின் அரசியாகக் கருதப்படும் மாரியம்மன் தெய்வத்தின் பெரிய மாரியம்மன் கோவில் ஈரோடு நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. 3500 சமீ பரப்பளவுடைய இந்த கோவில் கொங்கு சோழர்களால் 1200 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டடப்பட்டது.
இந்த கோவில் வளாகத்தில் கொண்டாடப்படும் பெரிய திருவிழாவான பொங்கல், வருடத்தின் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்று வருகிறது. இது தென்னிந்தியாவின் மிகவும் மங்களகரமான விழாக்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
இந்த பண்டிகையின் போது இக்கோவிலுக்கு வருகை தரும் புனிதப் பயணிகள் இக்கோவிலை மிகவும் புனிதமான இடமாக கருதுகின்றனர். பண்டிகை காலங்களில் பெருவாரியான பக்தர்களால் செய்யப்படும் 'மாவிளக்கு பூஜை' மிகவும் சிறப்புத் தன்மை வாய்ந்ததாகும்.
இந்த மாரியம்மன் அனைத்து வகையான நோய்களையும் அழிக்கவல்ல கடவுளாக நம்பப்படுகிறார். அற்புதமான சிலைகளை ஆங்காங்கே கொண்டுள்ள இந்த கோவிலின் கட்டிடக்கலை மிகவும் பிரபலமானது.



Click it and Unblock the Notifications