கணபதிபுலே ஸ்தலத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திலேயே இந்த மால்குண்ட் எனும் சிறிய கிராமம் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற மராத்தி கவிஞரான கவி கேஷவசூட் இந்த கிராமத்தை சேர்ந்தவராவார். அவரது பூர்வீக வீடு தற்சமயம் மாணவர்கள் தங்கும் விடுதியாக மாற்றப்பட்டுள்ளது.
இங்கு மராத்திய சாகித்திய பரிஷத் அமைப்பால் இந்த கவிஞருக்காக எழுப்பப்பட்டுள்ள நினைவுச்சின்னத்தையும் காணலாம். இது கேஷவ்சூட் ஸ்மாரக் என்று அழைக்கப்படுகிறது. அருகிலேயே மராத்திய இலக்கியத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள மியூசியம் ஒன்றும் உள்ளது.
மால்குண்ட் ஸ்தலத்தை அரசுப்போக்குவரத்து பேருந்துகள் மற்றும் உள்ளூர் ஆட்டோக்கள் மூலமாக அடையலாம்.



Click it and Unblock the Notifications