இசுலாமிய அறிஞரும் துறவியும் ஆன பாபா ரிஷி என்பவரின் நினைவாக அமைக்கப்பட்ட இவ்விடம், கடல் மட்ட்த்திலிருந்து, 2133 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. காஷ்மீரை கிபி 15 ஆம் நூற்றாண்டில் ஆண்டமன்னர் ஜைனுலாப்தீன் என்பவரின் அரசவையில் இருந்தவர் பாபாரிஷி என்னும் அறிஞர்.
அவர் 1480 ஆம் ஆண்டு மரணமடையும் வரை அரசருக்கு உண்மையான விசுவாசத்தோடு இருந்தார். அவரது சமாதியானது முகலாய மற்றும் பெர்சியக் கட்டடக்கலைத் தொழில்நுட்பத்துடன், சமாதியின் உட்புறம் அழகிய மரவேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டது.
ஒரே நேரத்தில், ஏராளமான பக்தர்கள் வந்து தரிசிக்கும் வகையில் பெரிய அளவில், ஒரு பெரிய அழகிய தோட்டத்துக்கு நடுவில் இச்சமாதி அமைக்கப்பட்டுள்ளது. ஸ்லெட்ஜ் வண்டிகளிலோ, குதிரைவண்டிகளிலோ, குதிரைகளிலோ இவ்விட்த்துக்கு வந்து சேரலாம். காலை 9 முதல் மாலை 5 மணி வரை பார்வை நேரமாகும்.



Click it and Unblock the Notifications