ராணி ஆலயம் என்று அழைக்கப்படும் மஹாராணி ஆலயமானது குல்மார்க் மலைவாசஸ்தலத்தின் நடுவே அமைந்துள்ளது. 1915 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த காஷ்மீரின் முன்னாள் மன்னர் மஹாராஜா ஹரிசிங்கின் மனைவியான மோகினிபாய் சிசோதியா என்பவரால் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது.
பண்டைய காலத்தில் டோக்ரா வம்ச அரசர்களின் ராஜாங்க ஆலயமாகத் திகழ்ந்துள்ளது. மோஹினீஸ்வரர் சிவாலயம் என்றும் அழைக்கப்படும் இவ்வாலயம் குல்மார்க்கின் எந்த மூலையிலிருந்து நோக்கினாலும் பார்வையில் படும் வண்னம் கட்டப்பட்டுள்ளது.
இக்கோவிலில் இந்துக்களின் அழிக்கும் கடவுளான சிவபெருமான் தமது தேவியான பார்வதிதேவியுடன் அருள்பாலிக்கிறார். சிவபக்தர்களும் அம்பாள் பக்தர்களும் ஆண்டு முழுதும் இங்கு வந்து வணங்கி செல்கின்றனர்.
இப்பகுதியின் ரம்மியமான அமைதியான சூழல் பக்தர்கள் இக்கோவிலில் அமர்ந்து தியானம் செய்ய மிகவும் ஏற்றவகையில் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications