நவகிரகங்கள் என்பது ஒன்பது கிரகங்கள் எனும் பொருளை உணர்த்துகிறது. இந்த நவக்கிரக கோயில் சித்ரசால் மலைகளில் அமைந்திருக்கிறது. ஒன்பது கிரகங்களை குறிக்கும் வகையில் ஒன்பது சிவலிங்கங்கள் இந்த கோயிலின் உள்ளே நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன.
ஒவ்வொரு சிவலிங்கங்கள் வெவ்வேறு நிறத்தைக் கொண்ட உடைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன.
அஹோம் வம்ச மன்னர் ராஜேஷ்வர் சிங்கா மற்றும் அவரது மகன் ருத்ரா சிங்கா அல்லது சுக்ரங்பா ஆட்சியின்போது18ம் நூற்றாண்டில் இந்த நவக்கிரக கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
1897ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு பூகம்பத்தின்போது இந்த கோயிலின் பெரும்பகுதி சேதமடைந்துவிட்டது. பின்னர் இரும்புத்தகடுகள் பொருத்தபட்டு இது சீரமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த கோயிலின் வானசாஸ்திர ரீதியான இருப்பிடம் காரணமாகவே குவஹாத்தி நகரத்திற்கு அதன் ஆதிப்பெயரான பிரக்ஜோதிஸ்புரா எனும் பெயர் வழங்கப்பட்டிருந்தது.
இந்த நவக்கிரகா கோயிலில் எப்போதும் வற்றாத சில்புகுரி எனும் குளம் ஒரு சிறப்பம்சமாக அமைந்திருக்கிறது. நகரத்தின் மற்ற பகுதிகளோடு இந்த கோயில் நல்ல போக்குவரத்து வசதிகளால் இணைக்கப்பட்டிருக்கிறது.