ஹாத்தி பூல் என்பது குவாலியரின் முதன்மை நுழைவாயில் ஆகும். இக்கோட்டையிலுள்ள இதர ஆறு நுழைவாயில்களைக் கடந்துதான் இந்நுழைவாயிலை அடையமுடியும். குவாலியர் கோட்டையை அடைவதற்கான ஏழாவது மற்றும் கடைசி நுழைவாயில் இதுவாகும்.
இந்நுழைவாயிலின் வழியாக நாம் இக்கோட்டையினுள்ளே மான்சிங் என்னும் அரசரால் கட்டப்பட்ட மன்மந்திர் அரண்மனைக்கு நேரடியாகச் செல்லலாம். இந்நுழைவாயிலுக்கு அருகே கல்லால் செதுக்கப்பட்ட ஒரு யானையின் சிலை உள்ளது.
இது உண்மையான யானையின் அளவுக்கு பெரியது. இந்த நுழைவாயிலுக்கு ஹாத்தி பூல் என்று பெயரிடப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஏனென்றால் இந்தி மொழியில் ஹாத்தி என்றால் யானை என்று பொருள்.
மற்றொரு காரணம், இந்த நுழைவாயிலானது ஒரு யானை புகுந்து செல்லும் அளவுக்கு மிகப் பெரியது. எனவே, இந்த நுழைவாயிலுக்கு ஹாத்தி பூல் என்று பெயரிடப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்நுழைவாயில் குவிந்த மாடத்துடன் கூடிய உருளை வடிவ கோபுரங்களுடன் திகழ்ந்து பார்ப்போரைக் கவரும் வண்ணம் உள்ளது.



Click it and Unblock the Notifications