கவுஸ் முகம்மது என்பவர் கி.பி 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சூஃபி துறவி ஆவார். அவர் முதலில் ஒரு ஆப்கானிய இளவரசராக இருந்து பின்னாளில் துறவியாக மாறியவர்.
இவர் புகழ்பெற்ற இந்துஸ்தானி இசைக்கலைஞர் தான்சேனின் குரு ஆவார். மன்னர் பாபருக்கு ஆலோசகராகவும் இருந்தார். கவுஸ் முகம்மதுவின் கல்லறையானது மத்தியகால முகலாயக் கட்டிட வகைக்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும்.
இக்கல்லறை மிகப்பிரம்மாண்டமாகவும் ஆடம்பரமாகவும் வடிவமைக்கப்பட்டு, மனதை மயக்கும் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் விளங்குகிறது. கவுஸ் முகம்மது எந்தவொரு அதிகாரத்திலும் இருந்ததில்லை.
ஆனால் பேரரசர் அக்பர் உள்பட எல்ல முகலாய அரசர்களும் கவுஸ் முகம்மதுவின் நினைவாக அவரது கல்லறையை அழகுபடுத்துவதிலும் போற்றிப் பாதுகாப்பதிலும் வருடக்கணக்கில் தமது கவனத்தையும் கருத்தையும் செலுத்தினர்.
அவர் முகலாய ஆட்சியாளர்கள் மனதில் எத்தகைய இடத்தில் குடிகொண்டிருந்தார் என்பதையே இது காட்டுகிறது. தான்சேன் கல்லறையும் இதற்கு அடுத்தாற்போலவே அமைந்துள்ளது.