தெர் என்று உள்ளூர் வாசிகளால் அழைக்கப்படும் இவ்விடம் ஹிசாரில் இருந்து 1.5கிமீ தொலைவில் உள்ளது. இந்த அக்ரோஹா மணல் திட்டு தொல்பொருள் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1888ல் இருந்து 1889வரை இங்கே தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்ட சி.டி.ரோஜர்ஸ் என்பவருக்குப் பின் 1978ல் இருந்து 1979வரை ஆச்சார்யா மற்றும் ஜே.எஸ்.கத்ரி என்ற இரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
இங்கு கிடைக்கப்பெற்ற வரலாற்று தொன்மை மிக்க பொருட்கள் 3ஆம் அல்லது நான்காம் நூற்றாண்டில் இருந்து 13 அல்லது 14ஆம் நூற்றாண்டை வரையிலானவை என கருதப்படுகின்றன.
ரோம, குஷான, குப்த காலத்து வெள்ளி மற்றும் செப்பு நாணயங்கள் கிடைத்தன. மேலும் பிராகிருத மொழியில் இருந்த முத்திரைகலும் கண்டெடுக்கப்பட்டன.
அதுமட்டுமல்லாது டெர்ரகோடா மிருக பொம்மைகள், மணல் பொம்மைகள், சாமான்கள், ஆகியவையும் கிடைத்தன. அக்ரோஹா தளம் ஒருபுறம் கோவில் வளாகத்தாலும் மற்றொரு புறம் ஷீலா மாதா கோவிலாலும் சூழப்பட்டுள்ளது.