சந்திர சௌடீஷ்வரர் கோவில் சிவபெருமானுக்கும் அவரது மனைவி பார்வதி தேவிக்கும் அர்ப்பணிக்கப்பட்ட குன்றின் மேல் இருக்கும் வழிபாட்டுத் தலம். உள்ளூர் மக்கள் சிவபெருமானை சௌடீஷ்வரர் என்று அழைப்பதால், இக்கோவில் இப்பெயர் பெற்றது.
தமிழ் நாட்டில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இக்கோவில் திருபுவனமல்லா பர்வதராஜா அந்தியாழ்வார் என்னும் ஹோய்சாலா சாம்ராஜ்ய மன்னரால் கி.பி.1260 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
தமிழ் நாட்டு கோவில் கட்டமைப்புகளில் இருந்து இக்கோவில் வேறுபட்டு இருந்தாலும், இதற்கென்றும் தொண்மையான வரலாறு இருக்கிறது. பிரம்மாந்த புராணத்தில், பத்ரகிரி மஹாத்மியம் என்று இக்கோவில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.
ஜாம்பவா, வ்ரிஷ்பா, மரகத சரோவரம், பாண்டவா, சிவகங்கை, ஹனுமா தீர்த்தம் உள்ளிட்ட பல்வேறு தீர்த்தங்களுக்கு செல்லும் பக்தகோடிகளும் இக்கோவிலுக்கு பயணம் மேற்கொள்கிறார்கள். இங்கு சிவபெருமான் தவிற முருகப்பெருமான் மற்றும் விநாயகருக்கும் தனி சன்னதிகள் இருக்கின்றன.



Click it and Unblock the Notifications