இந்தூரில் உள்ள பிரமிக்க வைக்கும் கோவிலாக அன்னப்பூர்ணா கோவில் உள்ளது. சில காரணங்களுக்காக மிகவும் புகழ் பெற்ற கோவிலாக இது உள்ளது. இந்தூரில் உள்ள மிகவும் பழமையான கோவிலாகவும், 9-ம் நூற்றாண்டில் ஆரிய மற்றும் திராவிட கட்டிடக்கலையில் கட்டப்பட்டதாகவும் இந்த கோவில் உள்ளது.
இந்த கோவில் 100 அடி உயரத்தை விடவும் அதிகமானமதாக உள்ளது. இந்து மதத்தில் உணவின் கடவுளாக கருதப்படும், அன்னப்பூர்ணா தேவிக்கான கோவிலாக இது உள்ளது.
இந்த கோவிலின் கட்டிடக்கலை, உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் கட்டிடக்கலையை அடையாளமாக வைத்து உருவாக்கப்பட்டதாகும். இந்த கோவிலின் நுழைவாயில் சிறந்த காட்சியைக் தருவதாக இருக்கும்.
நான்கு பெரிய யானைகள் தாங்கி பிடிப்பது போன்று இங்கிருக்கும் அலங்காரமான கதவு உள்ளது. இந்த கோவிலிற்குள் அன்னப்பூர்ணா தேவி, சிவ பெருமான், அனுமான் மற்றும் கால பைரவர் ஆகியவர்களுக்கு தனித்தனியாக கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கோவிலின் வெளிப்புற சுவர்களில் புராண காலப் பாத்திரங்கள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. இந்த கோவிலின் முதன்மையான பார்வையிடமாக 14.5 அடி அளவுள்ள காசி விஸ்வநாதரின் சிலை, தாமரை வடிவத்தில் உள்ளது.