இந்தூரிலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ள தேவ்குராடியா என்ற சிறிய கிராமத்தில் தேவ்குராடியா சிவா மந்திர் உள்ளது. இது சிவபெருமானுக்காக கட்டப்பட்டிருக்கும் பழமையான கோவிலாகும். 7-வது நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில் கற்களால் கட்டப்பட்டிருக்கும் நினைவுச் சின்னமாகும்.
18-ம் நூற்றாண்டில் இராணி அஹில்யா பாய் ஹோல்காரால் இந்த கோவில் புனரமைக்கப்பட்டது. உள்ளூர்வாசிகளிடம் கருடா தீர்த்தம் என்ற பெயரில் இந்த கோவில் புகழ் பெற்றுள்ளது.
இந்த கோவிலில் 'கோமுக்' என்ற பெயரில் ஒரு பசுவின் வாய் போன்ற அமைப்பிலிருந்து தண்ணீர் வருவதற்கான திறப்பு அமைக்கப்பட்டிருப்பது அதன் தனிச்சிறப்பான அம்சமாக கருதப் படுகிறது.
உண்மையான தேவ்குராடியா சிவன் கோவில் மற்றும் சிவலிங்கம் ஆகியவை பூமியில் அமிழ்ந்திருக்க, அதன் மீது இன்றைய கோவில் கட்டப்பட்டுள்ளதாக வரலாற்றில் சொல்லப் பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் சிவபெருமானின் விஷேச தினமான நவராத்திரியின் போது, இங்கு ஒரு பெரிய திருவிழா ஒன்றும் நடத்தப்பட்டு வருகிறது.



Click it and Unblock the Notifications