இராணி அஹில்யாபாய் ஹோல்காரால் கட்டப்பட்ட காஜ்ரானா கணேசர் கோவில் இந்தூரில் உள்ள புகழ் பெற்ற மத வழிபாட்டுத்தலமாகும். இந்த கோவிலின் கடவுளாக உள்ளவர் கணேச பெருமான்.
இந்த கோவிலில் பிரார்த்தனை செய்து வேண்டிக் கொண்டால், அந்த வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருப்பதால், அவர்களுக்கு மிகவும் முக்கியமான கோவிலாக இது உள்ளது.
எனவே, அதிகளவிலான பக்தர்கள் வந்து செல்லும் இந்த கோவில் எப்பொழுதும் மிகுந்த கூட்டத்துடன் காணப்படும். ஒவ்வொரு புதன் கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த கோவிலுக்கு பெருமளவிலான பக்தர்கள் வந்து செல்வார்கள்.
இந்த கோவிலில் வேறு சில தெய்வங்களின் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. கணேச பெருமானை ஆராதிப்பதற்காக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி திருவிழா, இந்த கோவிலின் மிகப்பெரிய பண்டிகையாகும்.
காஜ்ரானா கோவில் உள்ளூரில் மட்டும் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக இல்லாமல், வெளியூர் பயணிகளும் பெருமளவில் வந்து செல்லும் புகழ் மிக்க சுற்றுலா தலமாக உள்ளது. இந்தூருக்கு வந்து செல்லும் ஒவ்வொரு சுற்றுலா பயணியின் சுற்றுலா வரைபடத்திலும், காஜ்ரானா கோவில் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்