மத்தியப்பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள சமநிலைப் பாறைகள் நிஜத்தில் ஒரு உன்னதமான புவியியல் அற்புதமாகும். கோண்ட் ஆட்சியாளரான ராஜா மதன் சிங் என்பவரால் கட்டப்பட்டுள்ள மதன் மஹால் கோட்டைக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள இது, பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் உண்டான எரிமலைக் குழம்பிலிருந்து வெடித்துச் சிதறிய மேடுபள்ளமான பாறைகளால் உருவாக்கப்பட்டுள்ளது.
தொல்பொருள் மற்றும் புவியியல் ஆய்வாளர்களால் எவ்வாறு இப்பாறைகள் பல நூறு ஆண்டுகள் எந்தவொரு அசைவுமின்றி நிலைத்திருக்கின்றன என்று தெளிவாகக் கூற முடியவில்லை.
ஆனால், இவற்றின் எடை, இட அமைப்பு ஆகியவற்றுடன், 1997 ஆம் ஆண்டில் ஜபல்பூரை உலுக்கிய நிலநடுக்கத்தைக் கூட தாங்கி நிற்கக்கூடிய திறனை இப்பாறைகளுக்கு அளித்த புவியீர்ப்பு சக்தியும் சேர்வதனாலேயே இவை இதே இடத்தில் நிலைபெற்றிருக்கலாம் என்று அனுமானித்துள்ளனர்.
சமநிலைப் பாறைகள், மதன் மஹால் கோட்டையிலிருந்து பார்த்தால், முழு நகரத்தின் நீள அகலப் பரப்பான காட்சியுடன் சேர்ந்து தெளிவாக பார்வைக்குக் கிடைக்கின்றன.
புவியியல் ஆய்வாளர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கவல்லதான இப்பாறைகளைக் காணாமல் சென்றால், உங்கள் ஜபல்பூர் பயணம் நிறைவடையாது.