ஜபல்பூரில் உள்ள ஹனுமான் தல், நகரத்திலிருந்து சில கி.மீ. தொலைவில் உள்ள ஒரு ஏரியாகும். இங்குள்ள மொத்தம் 52 ஏரிகளுள் பதிமூன்று ஏரிகள் ஏற்கெனவே வறண்டு போய் விட்டன.
ஹனுமான் தல் ஏரி அரசாங்கத்தினால் மிக நன்றான பராமரிப்புடன் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த ஏரிகள் நகரமயமாதல் மற்றும் மக்கள் தொகைப் பெருக்கம் ஆகியவற்றின் தாக்கத்தால் மிகப் பெரும் அழிவை எதிர்கொண்டுள்ளன.
இயற்கையான அழகோடு கூடிய ஹனுமான் தல் அதன் பெயரே உணர்த்துவது போல் மத ரீதியிலான உணர்வுகளின் கூடாரமாகவும் விளங்குகிறது. ஹனுமான் இந்த இடத்தில் கால் பதித்தவுடன், இங்கு ஒரு நீர்நிலை தோன்றியதாகவும், அது ஒரு ஏரியாக உருவானதாகவும் கூறப்படுகிறது.
அதிலிருந்து, இவ்விடம் ஹனுமான் தல் என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஹனுமான் தல், ஏராளமான இந்து கோயில்கள் மற்றும் மசூதிகளால் சூழப்பட்டு, எப்போதும் மத ரீதியிலான லேசான பதட்டம் நிலவக்கூடிய ஒரு இடமாகத் திகழ்கிறது.
பிரசித்தி பெற்ற பியோஹர் குடும்பத்தினர் ஹனுமான் தல்லின் கரையோரத்தில் உள்ள படித்துறைகளுள் ஒன்றினை நன்கொடையளித்து கட்டித் தந்துள்ளனர். ஜபல்பூர் செல்வோர், இந்த புகழ்பெற்ற ஏரிக்குச் சென்று வரும் நல்ல அனுபவத்தைத் தவற விட்டு விடாதீர்கள்.



Click it and Unblock the Notifications