ராணி துர்காவதி அருங்காட்சியகம், பல வகைகளிலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இடமாகும். இந்த அருங்காட்சியகம், ஜபல்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களை ஆட்சி செய்து வந்த ராணி துர்காவதி அவர்களின் பங்களிப்பை கௌரவிக்கும் வண்ணம் 1964 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது.
இது ராஜ வாழ்க்கையின் சௌகரியங்களை சுற்றுலாப் பயணிகளுக்கு மிக விரிவாக எடுத்துரைக்கிறது. மேலும், இது ராணியின் வாழ்க்கையையும், அவரது நிர்வாகத்திறமையின் பன்முகங்களையும் காட்சிப்படுத்துகிறது.
நாணயங்கள், சிற்பங்கள், மண்பாண்டங்கள், ஓவியங்கள் ஆகியவற்றோடு அழகிய உடையலங்காரங்கள், வீட்டு உபயோக கலைப்பொருட்கள், போர்க்கருவிகள், கவசங்கள், புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் போன்றவற்றைக் கொண்டுள்ள இந்த அருங்காட்சியகம் இங்கு வரும் மக்களுக்கு, முக்கியமாக வரலாற்று நிகழ்வுகள் பற்றிய தகவல்களில் திளைக்க விரும்புவோருக்கு, இனிமையான அனுபவத்தை அள்ளிக் கொடுக்கிறது.
ராணி துர்காவதி நினைவு அருங்காட்சியகத்துக்குச் செல்வது வரலாற்றைப் புரட்டுவதற்கு ஒத்த செயலாகும். சிறப்பானதாக பரிந்துரைக்கப்படும் இந்த இடம், அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு வரலாற்றுப் பொக்கிஷமாகும்.